கலையும் இலக்கியமும் சங்கமித்த இடம் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ( த மு எ க ச )- 1
செப் 18 அன்று சுமார் மாலை 7 மணி இருக்கும் விருதுநகர் சித்தரஞ்சன் தாஸ் மைதானத்தில் அமைக்கபடிருந்த
12 ஆவது மா நில மாநாடு கரிசலும்,கந்தகமும்,கண்ணீரும் கொண்ட பூமியாம் விருது நகரில் 2011, செப் 16,17,18 ஆகிய நாட்களில் நடைபெற்றது மாநிலம் முழுதும் இருந்து 32 மாவட்டங்கள் கலந்து கொண்ட நிகழ்வு
செப் 18 அன்று சுமார் மாலை 7 மணி இருக்கும் விருதுநகர் சித்தரஞ்சன் தாஸ் மைதானத்தில் அமைக்கபடிருந்த
வில்லிசை வேந்தர் சாத்தூர் பிச்சகுட்டி அரங்கில் திரு தேனிவசந்தன் அவர்கள் வரவேற்ப்புடன் திரு மதுக்கூர் ராமலிங்கம் தொகுத்து வழங்க த மு எ க ச வின் மாநில தலைவர் திரு தமிழ் செல்வன் அவர்கள் 4௦௦௦ தோழர்களுடன் துவங்கிவைக்க . தமுஎகச இசைக்குழுவினரின் "சும்மா கிடந்த சங்க எடுத்து" என்ற பாடலுடன் சங்கமம் ஆரம்பமாகிறது .அதனுடன் மழையும் மெல்ல துவங்குகிறது. மலை அதிகமாவதுபோல் மக்களும் அதிகமாக வந்துகொண்டே இருந்தனர்.இந்த பாடல் முடிந்தவுடன் திரு வசந்தன் குறுக்கிட்டு விருதுநகர் பாராளும் மன்ற தொகுதி உறுப்பினர் திரு .மாணிக்க தாகூர் அவர்கள் வந்திருப்பதை அறிவிக்கிறார். அவர் முதலில் கூறியது விருதுநகரில் நல்லவர்கள் வரும்போதொல்லாம் மழை வரும் என்று வாழ்த்துகள் கூறி விடைபெற்றார். அதை தொடர்ந்து ஏழிசை திருவுடையான் தபேல இசைத்து கொண்டே பாட .
மாவட்ட ஆட்சியர் திரு பாலாஜி ஆ. இ.ப . வந்தார் அவருடன் தமிழ் செல்வன் ,சுப்புராஜ், பொது செயலாளர் சு.வெங்கடேசன் ,மணிமாறன் ஆகியோரும் அரங்கில் தேனி வசந்தன் வரவேற்ப்புரை வழங்க சுமார் 4௦௦௦ தோழர்கள் இருக்ககுடிய
அந்த கூடத்துக்குள் சாமியும் வந்தது .மாவட்ட ஆட்சியர் சிறப்புரை மிகவும் அழகாக பேசினார். தமிழ் எப்படி பிறந்தது என்றும் எழுத்துகள் எங்கு பிறக்கிறது என்றும் 2௦௦௦ வருடம் பின்சென்று தமிழ் புலவர்கள் செய்த ஆராய்ச்சியை சுட்டிகாட்டினார்.அருமையாக கூர் ஜி பெரும் தொகை கேட்கும் இந்த காலத்தில் குறுந்தொகை பேசும் ஆட்சியர் என்று புகழாரம் சூட்டினர் .
அவருக்கு S.A.பெருமாள் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
அடுத்த படியாக மதுரை கிழக்கு தொகுதி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் பேசியபோது நாம் எப்படி ஆங்கிலம் மீது வெறியாக இருக்கிறோம் என்றும் நாம் காற்றில் 1 லட்சத்து 76 ஆயரம் கோடி திருடியதையும் கூறினார்.சாதியை உருவாக்கிய மனு என்பவன் மட்டும் கைல கிட்டதான் நடப்பது வேறு என்று உரையை நிறைவு செய்தார்.
அவருக்கு ஏகாதிபத்தியத்தை முற்றிலும் மறுத்து தனது நிறுவனத்தை அமெரிக்கர்கள் பல கோடிக்கு கேட்டும் தராத தோழர் பாக்யராஜ் (செல்வன் ஊறுகாய் நிறுவனர்) நினைவு பரிசு வழங்கினார்.
அடுத்த பதிவில் திண்டுகல் சக்தி போர்ப்பறை பற்றி கூறுகிறேன்.
தொடரும்.......
தோழர்களுடன் நானும்
தோழ்மையுடன்
ரா.ராகுல் காந்தி @ தமிழ்தாசன்

No comments:
Post a Comment